இந்தியாவில் முதன் முறையாக குழந்தைகள் நேய காவல் பிரிவு  தொடக்கம்

இந்தியாவில் முதன் முறையாக குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல்பிரிவு திருச்சி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, காவல்துறை சார்பில், இந்த காவல்பிரிவு, திருச்சி மாவட்டத்தில் 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை விசாரிக்கவும், குற்றச் செயலில் ஈடுபடும் குழந்தைகளை, நல்வழிப்படுத்தும் நோக்கிலும், இளைஞர் நீதி சட்டம் 2015 உருவாக்கப்பட்டது.

இச்சட்டத்தில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.

குழந்தைகள் நேய காவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடங்கள்

திருச்சி மாவட்டத்தில், திருவெறும்பூர் மற்றும் துவரங்குறிச்சி.

கரூர் மாவட்டத்தில், வெங்கமேடு மற்றும் லாலாபேட்டை.

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆவுடையார் கோவில் மற்றும் பொன்னமராவதி.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகர் காவல் நிலையம் மற்றும் மங்கலமேடு.

அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் மற்றும் கூவாகம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம்.

இந்நிலையில், இந்த குழந்தைகள் நேய காவல் பிரிவு (Child friendly corner), குற்றச்செயலில் ஈடுபடும் குழந்தைகளை, காவல் நிலையத்திற்குள் அழைத்து வரக்கூடாது. சீருடையில் இருந்துகொண்டே, குழந்தைகளிடம் விசாரணை நடத்தக் கூடாது. எக்காரணம் கொண்டும், குழந்தைகளை கைது செய்து, சிறையில் அடைக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை, கடைப்பிடிக்கும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல் நிலையத்திற்குள், புகார் அளிக்க வரும்போது, தகுந்த சூழலை உருவாக்கி தரும் வகையிலும்   உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி பிபிசி