அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி, அந் நாட்டில் பல தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் இந்த போராட்டங்கள் மூலம், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகளுக்கான மாற்று தடுப்பு இடமாக செயல்படும் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டல், மெல்பேர்னில் மந்த்ரா ஹோட்டல், நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய கடல் கடந்த தடுப்புகளில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
இந்த அகதிகளை விடுவிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு உடனடியான நிரந்தர பாதுகாப்பை அவுஸ்திரேலியா அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.