PCR பரிசோதனையும் இராணுவத்தினர் வசம்!

இலங்கை இராணுவத்திற்கு புதிய PCR இயந்திரம் கொள்வனவு செய்து நாட்டில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போது PCR பரிசோனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முதல் முறையாக இராணுவத்திற்கு PCR இயந்திரம் கொள்வனவு செய்து சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 3ம் திகதி ஜனாதிபதி இராணுவத்திற்கு புதிய PCR இயந்திரம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மேலும் தனியார் நிறுவனங்கள் எம்முடன் இணைந்து புதிய PCR இயந்திரங்களை கொள்வனவு செய்து தர இணங்கியுள்ளன. அதனையும் பெற்று ஒரு மாதத்திற்குள் முப்படைகளையும் களத்தில் இறக்கி அதிக PCR சோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்” என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.