முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பித்து. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் தனது தாய் உள்ளிட்ட உறவுகளை பறிகொடுத்ததோடு தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வு பார்ப்போர் மனங்களை உருகச் செய்வதாகவிருந்தது.