மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த கடல் நீர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் சீரற்ற நிலையில் இருப்பதன் காரணமாக சில பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் அச்சநிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் கல்லடி தொடக்கம் நாவலடி வரையிலான கடற்கரையினை அண்டிய பகுதிகளில் இன்று காலை கடல் நீர் மக்கள் குடியிருப்பினை நோக்கிவந்ததன் காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் அச்ச நிலையேற்பட்டது.

இந்த கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வலைகள் சேதமடைந்துள்ளதுடன் வள்ளங்களும் சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நாவலடி பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உப்பு கடல் நீர் உட்புகுதந்ததன் காரணமாக கரைந்து நாசமாகியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

திடிரென கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.