ஊரடங்குச்சட்டம் சட்டவிரோதமானது – சுமந்திரன்

சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்திவரும் ஊரடங்குச்சட்டம் எந்த சட்ட விதகளையும் பின்பற்றாது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதனை சிறீலங்கா அரசுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துக் கூறவேண்டும் என தமிழத் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது அவசியானது. ஆனால் சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தும் ஊரடங்குச்சட்டம் எந்த விதிகளையும் பின்பற்றியதாக இருக்கவில்லை என அவர் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.