சிறீலங்கா பிரதமரின் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கொடுக்கும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்திற்கு சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதில் பங்கொடுப்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (4) இடம்பெறும் இந்த கூட்டத்தில் பங்கொடுப்பது தொடர்பில் கூட்டமைப்பு கட்சிகளிடம் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்த அறிக்கை ஒன்றை தாம் வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.