சிறீலங்காவில் நோயளர் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு

சிறீலங்காவில் நேற்று (1) மேலும் 25 நோயளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து நோயாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 162 பேர் குணமடைந்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிறீலங்காவில் ஐந்து மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் திங்கள் காலை 5 மணிக்கு ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.