ஐவன் பேதுருப்பிள்ளை அவர்கள் பிரித்தானியாவில் காலமானார்

பிரித்தானியாவில் பல தசாப்தங்களாக வசித்து பல வகைகளில் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் திரு ஐவன் பேதுருப்பிள்ளை அவர்கள் இன்று (28.04.2020) விம்பிள்டனில் இயற்கை எய்தினார்.

அவருக்கு வயது 84. London Royal Dutch Shell கம்பனியில் நீண்டகாலமாக உயர் பதவி வகித்து வந்த இவர் லண்டன் Tamil Writers Guild இன் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவராவார்.

இலங்கை பல்கலைக்கழக பட்டதாரியான இவர், 2009 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரைகள் Sri Lanka – Where was the World? என்ற நூலாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ivan ஐவன் பேதுருப்பிள்ளை அவர்கள் பிரித்தானியாவில் காலமானார்