நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு..! சற்றுமுன் வெளியான செய்தி.

நாளை (27) திங்கட்கிழமை முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையைில், இந்த மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.