தமக்கு அவசரமாக சடலங்களை பாதுகாக்கும் 1000 பைகளை தருமாறு சிறீலங்கா அரசு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கான கடிதம் ஒன்று சிறீலங்கா சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் இனால் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நேற்று முன்தினம் (24) அனுப்பபட்டுள்ளது.
திடீரென சிறீலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதும் தற்போது அங்கு 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.