மான் இறைச்சியுடன் மூவர் கைது!!

வவுனியா கூமாங்குளத்தில் மான் மற்றும் பண்டி இறைச்சியினை உடமையில் வைத்திருந்த மூவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பிராந்திய போதைதடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்றயதினம் குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15கிலோ காட்டுபன்றி மற்றும் 10 கிலோ மான் இறைச்சியை மீட்டதுடன்
அதனை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டில் மூன்று பேரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலயத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.