சிறீலங்கா கடற்படையினரையும் தாக்கியது கோவிட்-19

சிறீலங்காவில் பரவிவரும் கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு சிறீலங்கா கடற்படையினர் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது சிறீலங்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

சேதுவல மற்றும் ஜாஎல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களை கண்டறிவதற்காக கடற்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதே அவர்களை நோய் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வெலிசர கடற்படை முகாம் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை முகாமுக்கு அண்மையில் சென்றவர்களும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.