மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள காலப்பகுதியில், ஊரடங்கு சட்ட நடைமுறை, சமூக இடைவெளி உள்ளிட்ட கொவிட் 19 தடுப்புக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்படி அந்தந்த பகுதிகளில் அனுமதிபெற்ற மதுபான சாலைகளை திறப்பதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.