உழவுஇயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக பலி

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவுஇயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் வயது 26 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுபோக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த இளைஞன் விவாசாய நடவடிக்கைக்காக உழவு இயந்திரம் ஒன்றை இன்று காலை வீட்டில் இருந்து பிரதான வீதிக்கு செலுத்திய போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உழவுஇயந்திரம் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.