கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம்

கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர்.

இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடாது எனவும், மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் அச்சமுற்று வீடுகளில் இருந்த மீனவர்கள், தற்போது தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட வேதனை தாங்க முடியாமல் தகவலை வெளியிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.