ஆனையிறவு ஊடாக யாழிற்கு வந்த நபர்! தகவல் கோரும் பிரதேச செயலகம்.

ஆனையிறவு சோதனை மையம் ஊடாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்.திரும்பிய நபர் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.

படையினரது சோதனை சாவடியில் தனது பெயராக இராசா மாணிக்கம் (தேசிய அடையாள அட்டை இல-527452530V) எனவும் முகவரியாக இல81, கரவெட்டி வடக்கினையும் அவர் பதிவு செய்துள்ளார்.

எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது.

தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கமான 0212263258 இற்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.