சிறீலங்காவில் 176 கொரோனா நோயாளிகள்

இன்று (6) மேலும் 5 கோவிட்-19 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சிறீலங்காவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அங்கு இதுவைர 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கடுமையான வெப்பமான காலநிலை, அதிக ஈரப்பதன் போன்ற காரணகள் வைரசின் பரவலை மிகவும் குறைத்து வருவதாக சிறீலங்காவை தளமாகக் கொண்ட சுயாதீன ஆய்வாளர் கொசிபா அக்பரலி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போனை தளமாகக் கொண்ட கலாநிதி அன்வர் சேதுவல, பேராசிரியர் நாதன் பெற்றர் மற்றும் பேராசிரியர் ஜெப்ரி லெப்கோவிற் ஆகியோருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.