இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைகின்றது – உலகில் 69,330 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் கடந்த சில வாரங்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 525 பேர் பலியாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

ஸ்பெயினிலும் இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 674 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று 621 இறந்துள்ளதுடன், 4,934 பேர் இதுவரையில் இறந்துள்ளனர்.

உலகில் இதுவரை 69,330 பேர் இறந்துள்ளதுடன், 1,268,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா நோயிற்கு உட்பட்டுள்ள பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நோய் அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்படுவதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.