யாழ். சிறையிலிருந்து 44 கைதிகள் பிணையில் விடுதலை

யாழ். சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று(31) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸவின் நடவடிக்கைக்கு அமைய சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையின் கீழ் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன்படி கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு அமைய நேற்று44பேர் யாழ். சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இதுவரை 197 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 241பேர் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.