சிறீலங்காவின் நடவடிக்கை – பிரித்தானியா நாடாளுமன்றம் கடும் விசனம்

சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா கொரோனா வைரஸ் இன் தற்போதைய நெருக்கடியை காரணம் காட்டி விடுதலை செய்ததை பிரித்தானியா நாடாளுமன்றம் கடுமையாக விசனத்தை தெரிவித்துள்ளது.

அரச தலைவரின் இந்த எழுந்தமானமான முடிவு, சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் படையினர் எவரும் தண்டனை பெறமாட்டார்கள் என்பதை காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

UK house of common சிறீலங்காவின் நடவடிக்கை - பிரித்தானியா நாடாளுமன்றம் கடும் விசனம்