அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation ) செல்லுபடியான காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், 2019 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை (Media Accreditation ) செல்லுபடியான காலம் முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் 2020 மார்ச் 31ஆம் திகதி வரையில் செல்லுபடியானதென உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை (Media Accreditation ) இது வரையில் கிடைக்கப்பெறவில்லை.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டுக்கு செல்லுபடியானதாக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையைக் கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது ஊடக பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு வசதிகளை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.