வவுனியாவில் பண்;டாரவன்னியன் சிலைக்கு கௌரவமளித்து தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியினர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியினர் சுயேற்சைக்குழுவில் போட்டியிடுவதற்கான வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பதாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பதாக அமைக்கப்பட்டுள்ள மாவீரன் பண்டார வன்னியன் சிலைக்கு கௌரவமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.