தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழு கூட்டம் இன்று காலை திருகோணமலையில் இடம்பெறுகிறது.
கடந்த பல மாதங்களாகக் கட்சியில் செயலாளர், தவிசாளர் இல்லாமல் ரெலோ இயங்கி வரும் நிலையில், இன்று தற்காலிக செயலாளர், தவிசாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. அத்துடன், வேட்பாளர்களும் இறுதி செய்யப்படவுள்ளனர்.
அத்துடன், பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து நிதியை பெறுவது பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது.