சிறீலங்கா இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர். அவர் மேற்கொண்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தனது ருவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.