முகமூடிகளுடன் கொண்டாடப்படவுள்ள சிறீலங்காவின் சுதந்திர தினம்

சிறீலங்காவின் நட்பு நாடான சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் சிறீலங்காவிலும் அதிகமாக பரவிவருவதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெறவுள்ள 72 ஆவது சுதந்திர தினத்தை முகமூடிகளுடன் கொண்டாட சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களுக்கும், கலந்துகொள்ளும் மக்களுக்கும் முகமூடிகளை வழங்கவுள்ளதாக சிறீலங்காவின் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கே. ஜி. தர்மதிலகா தெரிவித்துள்ளார்.

கையை சுத்தம் செய்யும் திரவங்களும், அதிகளவு நீரும் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள் கொண்டாடும் இந்த சுதந்திரதினத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.