மன்னாரில் தடம் பதித்த யாழ் காளைகள்! அனைத்து பிரிவுகளிலும் வெற்றி

மன்னார், மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரித் திடலில் இடம்பெற்ற மாபெரும் சவாரிப் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் யாழ். போட்டியாளர்களின் காளைகள் வெற்றிபெற்றுள்ளன.

இந்த மாட்டு வண்டி சவாரி நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் 51 ஜோடி காளைகள் பங்குபற்றின. இந்தப் போட்டி A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்றது.

குறித்த 4 பிரிவுகளிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.