இலங்கைக்கும் பரவியது கொரோனா வைரஸ்? சீனப் பெண் உட்பட இருவர் பாதிப்பு

சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளாகியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சீனப் பெண் ஒருவர் உட்பட பெண்கள் இருவர் அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையில் (ஐ.டி.எச்.) சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற சுவாசத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் சீனாவில் பரவுகின்றது.

சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஓர் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாம்புக் காய்ச்சல் என்ற இந்த தொற்றுக்குள்ளானவர்கள் என்று நம்பப்படும் இருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுத் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.