வடக்கில் இரு கிராமங்களில் இராணுவம், பொலிஸ் வீடு வீடாக திடீர்ச் சோதனை

மானிப்பாய், உடுவில் பகுதியில் நேற்றுக் அதிகாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொண்டனர். வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட இராணுவத்தினர் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தேடப்படும் நபர்கள் யாராவது உள்ளனரா? என்று தேடி வருவதாக வீட்டு உரிமையாளர்கள் சிலரிடம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீதியால் சென்றவர்களும் சோதனை செய்யப்பட்டே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இராணுவத்தினரின் திடீர்ச் சோதனை நடவடிக்கையால் மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.