நடப்பாண்டில் இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் 18 பேர் பலி

நடப்பாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டில் இதுவரை துப்பாக்கிகள் உள்ளிட்ட 797 ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த 2025 ஆம் ஆண்டில் 2,404 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.