ரில்வின் சில்வாவுடன் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரே பிரான்ஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (02) பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னிணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தேசிய நல்லிணக்கம், நம்பிக்கையைக் கட்டியெழுப்பல், மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான திட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடியதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடனான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைக்ள குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.