ஊழல் தடுப்பு சட்டமூலத்தில் மீண்டும் திருத்தம் : பிமல் ரத்நாயக்க

மக்கள் பிரதிநிதிகள் தவிர்ந்த ஏனையோரின் சொத்துகள் மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (6) இடம்பெற்ற அமர்வின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.