யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்  யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது 221 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்றொழில்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,  யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன்,  வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன்,  பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள்,  பாடசாலை அதிபர்கள்,  பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.