அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு!

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் திகதி கையெழுத்​தானது. அடுத்த 60 நாட்களுக்​குள் இறுதி ஒப்​பந்த்தை எட்ட பேச்​சு​வார்த்​தை​யில் ஈடுபடு​வது என முடி​வெடுக்​கப்​பட்​டது.

அதன்​படி, ஸ்விட்​சர்​லாந்​தின் பர்​கென்​ஸ்​டாக் நகரில் இரு தரப்பினர் இடையே முதல் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில், அமெரிக்கா சார்​பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையி​லான குழு​வும் ஈரான் சார்​பில் வெளி​யுறவு அமைச்​சர் சையத் அப்​பாஸ் அராக்​சி, சபா​நாயகர் முகம்​மது பாக்​கெர் கலிபாஃப் ஆகியோர் அடங்​கிய குழு​வும் பங்​கேற்​றன.

பேச்​சு​வார்த்​தைக்கு சற்​று​முன், லெப​னானில் ஹிஸ்​புல்லா அமைப்பை ஈரான் கட்​டுப்​படுத்​தத் தவறி​னால், ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கை எடுக்​கப்​படும் என ட்ரம்ப் எச்​சரித்​தார். இதை சுட்​டிக்​காட்டி ஈரான் குழு வெளிநடப்பு செய்​தது. இருப்பினும் பின்​னர் நிலைமை சரிசெய்​யப்​பட்டு பேச்​சு​வார்த்தை தொடர்ந்​தது. இந்த முதல்​சுற்று பேச்​சு​வார்த்​தை​யில் சில முக்​கிய முடிவு​கள் எட்​டப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து மத்​தி​யஸ்த நாடு​களான பாகிஸ்​தானும் கத்​தா​ரும் இணைந்து வெளியிட்ட கூட்​டறிக்கையில், ‘‘அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரி​வான 14 அம்ச இறுதி ஒப்​பந்​தத்தை எட்டுவதற்​கான செயல் திட்​டத்தை இரு தரப்​பும் ஏற்​றுக் கொண்டுள்ளன. ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக வணி​கக் கப்பல்கள் பாது​காப்​பாக செல்​வதை உறு​திப்​படுத்த, தகவல் தொடர்பு வழி​முறை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.