இலங்கை எப்போதும் நடுநிலையாக செயல்படும் – அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டும் செயல்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர், வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைச் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலின் போது, அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்கு அமைச்சர் விஜித்த ஹேரத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அத்துடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் ரோந்து கப்பல்கள் மற்றும் விமானங்களுக்காகவும் அரசாங்கத்தின் நன்றியினை அவர் தெரிவித்துக்கொண்டார்.