சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லையேல் …. : சிறீதரன் எம்.பி. எச்சரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும். ஜே.ஆர். ஜயவர்தனவின் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்க கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அவசர கால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.