இலங்கைக்கான புதிய சீன பாதுகாப்பு அதிகாரியுடன் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் FU Xiao, அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சீனப் பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் சார்ந்த பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இரு அதிகாரிகளும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.

இராணுவப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டுப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரிஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.