ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது குறித்த புதிய வாக்கெடுப்பு

ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது குறித்த புதிய பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்காட்
லாந்து நாடாளுமன்றம் ஆதரவளித்துள்ளது. லண்டனுக்கு விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு ஆதரவாக 72 உறுப்பி னர்களும், எதிராக 55 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பொது வாக்கெடுப்பை ஏற்பாடு செய் வதற்கான அதிகாரங்களை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே இங்குள்ள முக்கியப் பிரச்சினையாகும். ஐக்கிய இராச்சியத்திலிருந்து இப்பகுதி பிரிந்து செல்வதை ஆதரிக்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) தலைவரும், ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சருமான ஜான் ஸ்வினிதான் இந்த முன்னெடுப்பைத் தொடங்கினார்.
மே மாத தொடக்கத்தில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக 58 இடங்களை வென்று, ஸ்காட்லாந்து தேசியக் கட்சி ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது. பின்னர் ஸ்வினி, இந்தத் தேர்தல் முடிவுகள் சுதந்திரத்திற்கான கட்சியின் ஆதரவை உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.
2014 வாக்கெடுப்பின் முடிவால் சுதந்திர இயக்கம் ஓரளவிற்கு மட்டுமே பலவீனமடைந்தது. 2016-ல் பெரும்
பாலான ஸ்காட்லாந்து வாக்காளர்கள் எதிர்த்த பிரெக் ஸிட்டிற்குப் பிறகு இது புத்துயிர் பெற்றது.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற நாடா ளுமன்றத் தேர்தலில், சுதந்திர ஆதரவு ஸ்காட்லாந்து தேசியக் கட்சியும் (SNP) ஸ்காட்லாந்து பசுமைக் கட்சியும் இணைந்து 129 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 73 இடங்களை வென்றன. இதன் மூலம், பிரிட்டனைப் பிரிப்பதற்கு ஆதரவாக ஹோலிரூட்டில் இதுவரை இல் லாத மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
புதிய சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பை – பொதுவாக “இண்டிரெஃப்2” (indyref2) எனக் குறிப்பிடப் படுவது – அனுமதிக்கும் வகையில், டவுனிங் தெரு “1998 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து சட்டத்தின் கீழ் ஒரு பிரிவு 30 உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்ற முதல் அமைச்சர் ஜான் ஸ்வினியின் கோரிக்கைக்கு ஆதரவாக எம்.எஸ்.பி-க்கள் (MSPs) திங்களன்று(25) வாக்களித்தனர்.