அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் இருந்து நம்பகத் தகவல் வெளியாகி உள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்து, ஈரான் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அந்த வகையில் போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.



