மாகாண சபைத் தேர்தல்: பழைய முறையில் நடத்த அரசியல் கட்சிகள் இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை தற்காலிகமாக பழைய முறையில் நடத்துவதற்கும், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அரசியல் கட்சிகள் சுயமாக தீர்மானம் எடுக்க அனுமதிப்பதற்கும் அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை பெறும் நோக்கில் இன்று (26) செவ்வாய்க்கிழமை பெப்ரல் அமைப்பினால் (பெப்ரல்) ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.