நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் அர்ச்சுனா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கடுமையாக சாடியிருந்தார். அதைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதியான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாக பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ்ச் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயற்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்த துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.



