பிரித்தானிய பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு, விஜய்க்கு கடிதம்

ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரித்துக்களின் அடிப்படையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத் தயார் என்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் சார்பாக தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மெக்டோனா (Siobhan McDonagh) மற்றும் உமா குமரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடித்தில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி தமிழ் நாட்டிலுள்ள மக்களுக்கும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்களுக்கும் முக்கியமானது என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி விஜய்யின் ஆட்சிக்காலத்தில் அனைத்து மக்களின் ஜனநாயக விழுமியங்கள் கட்டியெழுப்பப்படும் என தாம் நம்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்

இதற்கமைய பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ் சமூகம், தமிழ்நாட்டுடன் ஆழமான மற்றும் நீடித்த பிணைப்பைக் கொண்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.