ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வருகை தர உள்ள நிலையில் இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட குழுவினர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் விஜயமாக மே 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸாவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபடஉள்ளனர்.
மேலும், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இத்தூதுக்குழுவினர் ஒரு சிறப்பு கலந்துரையாட யாடலில் ஈடுபடஉள்ளனர்.
ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் மே 04 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைப் பார்வையிடவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சரும் அவரது குழுவினரும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு (பரிமாற்றங்கள், பாட நெறிகள் சம்பந்தமான ), ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சுற்றுலா சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கியப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, சுகாதார சேவையின் ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவும் அவரது குழுவினரும் தங்களது மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, மே 05 அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளனர்.



