மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக நாட்டுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும், தற்போதைய சூழலில் அரசாங்க சேவைகளை எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்வதற்கும் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட வலுசக்தி தேவைகளை தட்டுப்பாடின்றி பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதனூடாக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும், போர் சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



