கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (17)  இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நடத்தி வரும் தொடர் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.