இலங்கை – பின்லாந்து அரசியல் ஆலோசனை ஒப்பந்தம் கையெழுத்து

இலங்கை மற்றும் பின்லாந்து இடையிலான இரண்டாவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் ஹெல்சிங்கியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக, அரசியல் ஆலோசனை அமைப்பை நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. இது இருநாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், முதலீடு, தொழிற்பயிற்சி, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் விசா வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், பின்லாந்தின் தொடர்ந்த ஆதரவிற்கும் இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.