இலங்கை தற்போது வழமை நிலைக்கு மாறிவரும் நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த கல்வி அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல், பேரிடரால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16ஆம் திகதி தொடங்கும், அதே நேரத்தில் பேரிடரால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்விப் பீடங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



