ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பினால் (Asian Productivity Organization) வெளியிடப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தினால் (Korea Development Institute) சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் (National Productivity Roadmap) மற்றும் உற்பத்தித்திறன் நிபுணர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழை வெளியிடுவதற்கு இணையாக, கடந்த வியாழ்கிழமை (20) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் கையளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பிரதான கைத்தொழில் துறைகளான விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில் ஆகியன எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், இலங்கையின் தேசிய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன.
அத்துடன், இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தொழில்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, குறுகிய காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய புதிய கைத்தொழில்களின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் கொள்கைத் திட்டங்களும் முன்வைக்கப்படுகின்றன.



