யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்

VID 20251021 WA0015 யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் வைத்தியசாலையில் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது  உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  பின்னர் நோயாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில்  இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.