இலங்கையில் 2025ம் ஆண்டு பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 18 பெண்கள் கைது…

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அண்மையில் கைது செய்யப்பட்டதையடுத்து, பாதாள உலகக் குழுக்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பல பெண்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களின் போது, குற்றக் குழுக்களுக்குத் துணையாகவும் செயல்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.